5 நாட்களுக்கு பின்.. இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை - எவ்வளவு பாருங்க
5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 9) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.66,320க்கும், கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.8,290க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.102-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.