இனி தங்கம் வாங்கவே முடியாது? ரூ.70 ஆயிரத்தை கடந்த விலை
தங்கம் விலை ரூ.70 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 12) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.70,160க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.8,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்காவுக்கும் - சீனாவுக்கும் வரி விதிப்பால் மோதல் அதிகரித்து, பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் தங்கம் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.