வார இறுதியில் தங்கம் விலை அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
உயர்வு
அதன்படி,சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,680-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.45,440-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,176-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.00 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.79,000-ஆக இருக்கிறது.