அதிரடி மாற்றத்தில் தங்கம் விலை; உறைந்த மக்கள் - இன்றைய நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 29) விலை உயர்ந்துள்ளது.
உயர்வு
அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,700க்கும், சவரனுக்கு ரூ.480உயர்ந்து ரூ.85,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 160 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.