45 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை - இல்லத்தரசிகள் ஷாக்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது.
அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த வாரம் அட்சயதிருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உயர்வு
அதன்படி, இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து 5,630 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.45,040 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 4,612 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து ரூ.36,896 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700 எனவும் விற்பனையாகிறது.