ஒரே நாளில் சவரனுக்கு 2,080 உயர்வு - இறங்கிய இடி!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (அக். 21) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.260 அதிகரித்து ரூ.12,180க்கும், சவரனுக்கு ரூ.2080 அதிகரித்து ரூ.94,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராம் ரூ.188 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.