அம்மனின் குரல் கேட்கிறது...கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர் சாமி தரிசனம்..!

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
By Thahir Aug 13, 2022 10:41 AM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுள் அம்மனின் குரல் சத்தமாகவும், தெளிவாகவும் கேட்பதாக பதிவிட்டுள்ளார்.

காதல் திருமணம் - பிரிவு

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் தனுஷை காதலித்து வந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Dhanush

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் நடிப்பில் மூன்று, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக தங்கள சமூக வளைத்தல பக்கங்களில் அறிவித்தனர்.

இவர்களின் இந்த அறிவிப்பால் குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பிரிவு அறிவிப்புக்கு பின் இருவரும் திரைத்துறையில் பிசியாக இருந்து வருகின்றனர்.

அம்மனின் குரல் கேட்கிறது 

அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு அண்மையில் அதிக வருமான வரி செலுத்துவதற்காக புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில சார்பில் கௌரவ சான்றிதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் அவர் எனது இந்த வெள்ளிக்கிழமை காலை காளிகாம்பாள் மற்றும் திருவேற்காடு அம்மன் தரிசனம் செய்து அருள் பெற்றேன்.

Aishwarya Rajinikanth

அப்போது அம்மனை பார்க்கும் போது அம்மன் தன்னை பார்த்து புன்னகைத்தார். ஒரு போதும் பயப்பட வேண்டாம் என என்னை சொல்வது போன்று இருக்கிறது.

என்னுடைய கண்கள் மீண்டும் அம்மனிடம் செல்கிறது. தீப ஆராதனையின் போது அம்மனது குரல் என்னுள் சத்தமாக கேட்கிறது. ஓம் சக்தி..பரா சக்தி ஆடிவெள்ளி என்று பதிவிட்டுள்ளார்.