தெருக்கடையில் நின்று டீ குடித்த சச்சின்... - வைரலாகும் புகைப்படம்...!
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தெருக் கடையில் நின்று டீ குடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெருக் கடையில் நின்று டீ குடித்த சச்சின்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
1992, 1996 ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகள் சச்சினை உலக அரங்கில் தலை சிறந்த ஆட்டக்காரராய் தன்னை நிலை நிறுத்தினார். 1993-ல் அசாருத்தீன் தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணிக்கு சச்சின் துணைத் தலைவராய் 18 வயதிலேயே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி மேத்தா என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டார் சச்சின். இத்தம்பதிக்கு சாரா, அர்ஜுன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தெருக்கடையில் நின்று டீ குடித்த சச்சின்
தற்போது சச்சின் தன் குடும்பத்துடன் மும்பையிலிருந்து கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதற்காக அவர் கர்நாடக மாநிலம், பெலகாவி வழியாக பயணித்துக் கொண்டிருந்தார். நேற்று காலை 8 மணியளவில் கோவா செல்லும் வழியில் Fauji டீ ஸ்டாலில் காரை நிறுத்தி டீ குடித்தார்.
அப்போது, டீக் கடையில், அவரது தீவிர ரசிகரான கடை உரிமையாளருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
தற்போது இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#belagavi Macche @sachin_rt stopped over at Fauji tea stall en route to Goa today morning at 8am.His Mercedes & Innvoa car stopped over for tea and he then gave an autograph to the owner and left for Goa pic.twitter.com/VsY8R6Vkza
— All About Belgaum (@allaboutbelgaum) October 31, 2022