கோவாவில் இருந்து 600 நாட்டிக்கல் தொலைவில் மயமான மீனவர்கள்

By Praveen Apr 24, 2021 10:17 PM GMT
Report

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 9 ம் தேதி 11 பேருடன் ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கோவா பகுதியில் இருந்து 600 நாட்டிக்கல் தொலைவில் கடலில் மூழ்கி விபத்து கப்பல் மோதி படகு கவிழ்ந்திருக்கலாம் என மீீீீீனவர்கள் குற்றசாட்டு.

படகில் இருந்த 11 மீனவர்களின் நிலை என்ன என தெரியவில்லை. படகு மூழ்கியதாக கூறப்படும் நிலையில்,அந்த பகுதியில் குமரி மாவட்ட மீனவர்கள் 5 படகுகளில் தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது . மேலும் மத்திய மீீீீீீட்பு படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜோசப் பிராங்க்ளின் (47) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 9ம் தேதி அதே ஊரை சேர்ந்த ப்ரடி (42),ஏசுதாஸ் (42), ஜான்(20), சுரேஷ்(44), ஜெபிஷ் (18), விஜிஸ்(20), ஜெனிஸ்டன் (20), ஜெகன் (29), ஸ்டெரெக், மால்வின் (20) உட்பட 11 பேர் சேர்ந்து ஆள்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

நேற்று மதியம் கோவாவில் இருந்து 600 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர் அப்போது அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். இதனையடுத்து மற்ற பல படகுகள் அந்த வழியாக கடந்து சென்ற போது ஒரு விசைப்படகு இரண்டாக உடைந்து கடலில் மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

உடனே அந்த படகில் இருந்த மீனவர்கள் வள்ளவிளையை சேர்ந்த உறவினர்களுக்கும் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்ற படகுகளில் இருந்த மீனவர்களும் தங்களது படகுகள் மூலம் படகு கடலில் கவிழ்ந்து கிடக்கும் பகுதியில் தேடி வருகின்றனர். இந்த படகு கப்பல்கள் ஏதேனும் மோதி விபத்தில் சிக்கியதா அல்லது வேறு ஏதேனும் காரணம் கொண்டு உடைந்ததா என்று தெரியவில்லை.

அதிகமாக படகு மோதிதான் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.தற்போது வரை படகில் பயணித்த 11 மீனவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. சிறிது நேரத்திற்கு முன்பாக அந்த படகில் இருந்த மீன்பிடிக்கும் வலைகள் மற்றும் சேட்டிலைட் ரிசிவர் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக மூழ்கி மாயமான மீனவர்களை தேடும் சக மீனவர்கள் சேட்டிலைட் போன் மூலம் குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

மேலும் படகு கவிழ்ந்து கிடக்கும் பகுதிக்கு அருகில் 5 சைனா கப்பல்கள் நிற்பதாகவும் அவர்களிடம உதவி கேட்டபோது விரட்டியதாகவும் தெரிவித்தனர். தற்போது வரை கடலில் மூழ்கி மாயமான மீனவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மீனவர்களின் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.

மேலும் காணாமல் போன மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய மீட்பு படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.