செல்வராகவன் மீது காதல் வர காரணம்? முதல் பிரசவத்தில் அவர்.. கீதாஞ்சலி பளீச்!

Tamil Cinema Selvaraghavan Tamil Actors Tamil Actress
By Jiyath Apr 14, 2024 04:00 PM GMT
Report

தனது கணவர் இயக்குநர் செல்வராகவன் குறித்து கீதாஞ்சலி பேசியுள்ளார். 

செல்வராகவன்

தமிழ் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவர் 'காதல் கொண்டேன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார்.

செல்வராகவன் மீது காதல் வர காரணம்? முதல் பிரசவத்தில் அவர்.. கீதாஞ்சலி பளீச்! | Gitanjali Selvaraghavan About Her Love Story

கடைசியாக நானே வருவேன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான 4 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து இரண்டாம் உலகம் படத்தின் போது, உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொனார்.

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

காதல் வந்தது 

இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கீதாஞ்சலி "இரண்டாம் உலகம் படத்தின் கதையை படித்து செல்வராகவன் மீது காதல் வந்தது அந்த காதல் நாட்கள் செல்ல செல்ல இன்னும் ஆழமாகிக் கொண்டே தான் செல்கிறது.

செல்வராகவன் மீது காதல் வர காரணம்? முதல் பிரசவத்தில் அவர்.. கீதாஞ்சலி பளீச்! | Gitanjali Selvaraghavan About Her Love Story

நான் முதல் பிரசவத்திற்கு பிறகு தாய் பால் சரியாக வராததால் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன். தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால் உடல் எடை கூடிக்கொண்டே போய்விட்டது. அதன் பிறகு தான் இப்போது இயல்பாகி இருக்கிறேன். அந்த நேரத்தில் கோவத்தில் தட்டு, டம்ளர் பறக்கும். அதை புரிந்து கொண்ட செல்வா என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்" என்று தெரிவித்துள்ளார்.