காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் - துக்கம் தாங்காமல் வீடியோ காலில் பேசிக்கொண்டே காதலன் தூக்கிட்டு தற்கொலை
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரியாஸ். இவர் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். ஆனால், கடந்த கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இவரிடம் கருத்து வேறுபாட்டால் சண்டை போட்டு பிரிந்து போய் விட்டார்.
தனிமையில் வாழ்ந்த ரியாஸ் பெங்களூரில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வேலை தேடி வந்துள்ளார்.
பெங்களூரில் வேலை செய்துக் கொண்டிருந்த போது, ரியாசும் வேறு ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயப்பட்டதை அறிந்த ரியாஸ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
முதல் மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டார்.. காதலியும் இப்போது பிரிந்து போகப் போகிறார் என்று தன்னுடைய வேதனையை நண்பர்களிடம் கூறி புலம்பி வந்துள்ளார்.
சம்பவத்தன்று நண்பர்களுக்கு வீடியோ கால் செய்த ரியாஸ், என் காதலியை என்னால் மறக்க முடியவில்லை... என்னால் இனி வாழ முடியாது என்று பேசிக்கொண்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.
இதை வீடியோ கால் மூலமாக பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால் கொஞ்சம் கூட கேட்காமல் தூக்கில் தொங்கி உயிரை விட்டார் ரியாஸ். உடனடியாக நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதை அறிந்த போலீசார் ரியாஸ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.