காதலியை தேடிச் சென்ற பெண் காதலி - சரமாரியாக தாக்கிய பெற்றோர்..!
கன்னியாகுமரி அருகே தனது காதலியை தேடிச் சென்ற பெண்ணை காதலியின் பெற்றோர் தாக்கி துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை தேடிச் சென்ற பெண்
கன்னியாகுமரி மாவட்டம் துாத்துாரைச் சேர்ந்த மாணவி ஒருவர் திருச்சி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் படித்த மற்றொரு மாணவியுடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒரின சேர்க்கையாளர்களாக காதலில் முழ்கி இருந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அறிந்த துாதுார் மாணவியின் பெற்றோர் தங்களது மகளை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருச்சியைச் சேர்ந்த மாணவி காதலியின் வீட்டிற்கு சென்று அவருடன் பேச முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த துாத்துார் மாணவியின் பெற்றோர் திருச்சி மாணவியை சரமாரியாக தாக்கி விரட்டினர்.