தரமற்ற சாலையால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - தலை சிதைந்து பலியான சோகம்!
விபத்தில் தலை சிதைந்து இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
பெண் பலி
கடலுார் மாவட்டம் அரிசிப் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நித்யா (26), வரது தோழி ஹரிணி (26). இருவரும் சோழிங்கநல்லுாரில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இருவரும் முன் தினம் நள்ளிரவு பல்லாவரத்தில் இருந்து வாகனத்தில் வீடு திரும்பினர்.
பரங்கிமலை வேளச்சேரி உள்வட்டச் சாலையில், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாலம் அருகே பின்னால் வந்த மினி லாரி மோதியது. அதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். பின்னால் இருந்த நித்யா ஹெல் மெட் அணிந்திருந்தும், லாரி சக்கரம் ஏறி இறங்கி தலை சிதைந்து உயிரிழந்தார்.
தரமற்ற சாலை
வாகனத்தை ஓட்டி வந்த ஹரிணி, லேசான காயத்துடன் உயிர் தப்பினார். போலீசார் நித்யாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுனரான, ராணிப்பேட்டையைச் சேர்ந்த மோகன்குமார்(21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து நித்தியாவின் உடல் கடலூர் அரிசி பெரியாங்குப்பம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு தயார் செய்தனர். ஆனால் விபத்தில் அவரது தலை சிதைந்து அவர் உயிரிழந்த காரணத்தினால் அவரது தலைக்கு பதில்
அவரது புகைப்படத்தை வைத்து உருவமாக செய்து அதற்கு இறுதி அஞ்சலி செலுத்தி அந்த உடலை அவர்கள் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் தரமற்ற சாலையில் தேங்கிய கழிவு நீரால் காவு வாங்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.