காதலன் கண்முன்னே கதறிய காதலி - சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்!

Rajasthan Crime
By Jiyath Jul 18, 2023 07:19 AM GMT
Report

காதலன் கண்முன்னே சிறுமியை மூன்று கல்லூரி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பட்டியலின சிறுமி தனது காதலனுடன் வீட்டை விட்டு தப்பி ஓடிவந்துள்ளார். இருவரும் இரவு 10.30 மணியளவில் ஜோத்பூர் வந்துள்ளனர்.

காதலன் கண்முன்னே கதறிய காதலி - சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்! | Girl In Front Of Her Lover In Rajasthan Ibc 09

பின்னர் இருவரும் இரவு தங்குவதற்கு கெஸ்ட் ஹவுஸ் ஒன்றுக்கு சென்றபோது அங்கு பராமரிப்பாளராக பணிபுரியும் சுரேஷ் என்பர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து இருவரும் பௌடா சௌராஹாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு வந்த சமந்தர் சிங், தரம்பால் சிங், பட்டம் சிங் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்கள் அவர்களிடம் நன்றாக பேசிப்பழகி அவர்களுக்கு தண்ணீர், உணவு ஆகியவற்றைக் கொடுத்துள்ளனர்.

பின்னர் இருவருக்கும் உதவுவதாக கூறிய இந்த குற்றவாளிகள் அதிகாலை அவர்களை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி ஜேஎன்வியூ பழைய வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்திற்கு ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளனர். அந்த இடத்தில் வைத்து காதலனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து அந்த சிறுமியை காதலன் கண் முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக வாக்கிங் வரும் நபர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வரத் தொடங்கியதும் குற்றவாளிகள் மூவரும் தப்பியோடியுள்ளனர்.

குற்றவாளிகள் கைது

இந்நிலையில் அங்கு வாக்கிங் வந்த நபர்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் உடனடியாக மோப்ப நாய், தடவியல் அதிகாரிகள் மூலம் விசாரணையை தொடங்கினர்.

காதலன் கண்முன்னே கதறிய காதலி - சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்! | Girl In Front Of Her Lover In Rajasthan Ibc 09

இதனைத் தொடர்ந்து ஜோத்பூரின் ரத்தநாடா அருகே கணேஷ்புராவிலுள்ள ஒரு வீட்டல் ஒளிந்திருந்த குற்றவாளிகள் மூவரையும் அடித்த சில மணி நேரத்திலே போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

குற்றவாளிகள் நான்கு பேர் மீதும் போக்சோ, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.