மாலையும், கழுத்துமாக மணக்கோலத்தில் சிலம்பம் சுற்றிய வீரமங்கை - வைரல் வீடியோ!
தூத்துக்குடியில் மணமகள் ஒருவர் மணக்கோலத்தில் சிலம்பம், சுருள்வாள் சுற்றி, பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை அடுத்த தேமாங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த நிஷா, காவல்துறை பணியில் சேர வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவரின் திருமணத்தில், மணமகளின் தோழிகள் இணைந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில் அவர்கள் சிலம்பாட்டம், சுருள்வாள், போன்ற வீர விளையாட்டுக்களை செய்து காட்டினர். மணமகள் நிஷா மற்றும் அவரது தோழிகள் கடந்த 3 ஆண்டுகளாக இது போன்ற விர விளையாட்டுகளை முறையாக பயின்று வருவதாகவும் தற்போது சிலம்பாட்டாம், சுருள்வாள், அடிமுறை, களறிபைட்டு, தீபந்தம் போன்ற விளையாட்டுகளில் அவர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் திருமணம் முடிந்ததும் தன் உறவினர்கள் முன்பு மணமகள் நிஷா திருமணமான பட்டுபுடவையுடன் மாலையும் கழுத்துமாக சிலம்பம் மற்றும் சுருள்வாள் சுற்றி அசத்தினார். இந்த வீடியோ
காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.