நம்பவைத்து ஏமாற்றிய நீயா நானா கோபிநாத்..? செய்வதறியாது குமுறும் இளம் பெண்..!

Gopinath Chandran
By Karthick Jan 09, 2024 04:46 AM GMT
Report

நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலத்தை அடைந்தவர் கோபிநாத்.

கோபிநாத்

சிலரால் சில நிகழ்ச்சிகளுக்கு பெயர். சில நிகழ்ச்சிகளால் சிலருக்கு பெயர். ஆனால், இரண்டும் சரி பங்காக கலந்து, தங்களுக்கென தனி அடையாளத்தை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியவர்கள் நீயா நானா நிகழ்ச்சியும் அதன் தொகுப்பாளரான கோபிநாத்.

girl-complaining-about-neeya-naana-gopinath-video

பல கோணங்களை விவாதிக்கும் இந்த நிகழ்ச்சி, அதனை சரியான முறையில் கையாளும் தொகுப்பாளர் என ஒவ்வொரு வாரமும், கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக பிரபலமாக, முக்கிய நிகழ்ச்சியாக தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது நீயா நானா.

பெண் வீடியோ

இந்நிலையில், தான் பெண் ஒருவர் தொகுப்பாளர் கோபிநாத் தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிவிட்டார் என கூறிய வெளியாகியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதாவது, 2016 ஆம் ஆண்டின் நிகழ்சியில் வயதான ஒருவர் தன்னுடைய பேத்தியின் படிப்புக்காக கஷ்டப்படுவதாக பேசிய நிலையில், இன்னும் மீதி 26,000 கட்டவேண்டி இருப்பதுவும் அவரது பேத்தியுடன் மனமறிந்து கூற, சட்டென கோபிநாத், "நீங்கள் கவலைப்படாதீர்கள், அந்த மீதி பணத்தை நான் காட்டுறேன் என மேடையில் கூறினார்.

girl-complaining-about-neeya-naana-gopinath-video

இதனை நம்பிய அந்த மாணவி, கோபிநாத் மேனேஜருக்கு போன் செய்ய, ஆரம்பத்தில் இரண்டு, மூன்று முறை கோபிநாத் பிஸியாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். பிறகு, தானும் உதவி செய்ய வந்தவர்களை தொல்லை பண்ண கூடாது என்ற காரணத்தால், அவர்களே கூப்பிடுவார்கள் என்று காத்திருந்த நிலையில், பல மாதங்கள் கழிந்தும் அவர்களிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்றார்.

girl-complaining-about-neeya-naana-gopinath-video

தற்போது நான் என் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்காக தேடிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அப்பெண்,. தன்னுடைய தாத்தாவை தான் நன்றாக பார்த்துக் கொள்வேன் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ நீண்ட நாட்கள் கழித்து தற்போது வைரலாகின்றது. இந்த வீடியோ வெளியான பிறகு கோபிநாத் தரப்பு அந்த பெண்ணிடம் பேசி எதாவது உதவிகள் செய்தனவா..? என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.