ஜாக்பாட் தான் - ராமர் கோவில் பங்கேற்பாளர்களுக்கு இவ்ளோ பரிசுகளா..? இவ்வளவு விசேஷம் இருக்கா அதுல..!!
சற்று முன்பு ராமர் சிலை பிரதிஷ்டை வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள பிரபலங்கள் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட உள்ளதாக அயோத்தி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை ஏறப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இதில் பல அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில்துறை,சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ்வளவு பரிசுகளா..?
மேலும் இவ்விழாவிற்காக மகாராஷ்டிரா மாநிலம் உஜ்ஜைனியில் இருந்து அயோத்திக்கு ஐந்து லட்ச லட்டுகள் அனுப்பப்படவுள்ளன. இந்நிலையில் சுமார் 7500 பேர் கும்பாபிஷேக விழாவிற்கு வருவார்கள் என்று கருதப்படுகிறது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசாக காவி துண்டு, பிரசாதம்,ராமர் கோயில் புகைப்படம், 500 கிராம் லட்டு, குடுவையில் ராமராஜ்ய மண், ராமர் உருவம் பதித்த நாணயம் ஆகியன அயோத்தி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.