படுக்கையில் உடன் படுக்கும் பேய் - சோபாவில் ஒய்யாராமாய் உட்கார்ந்திருக்கு...இது பேய்கள் நிறைந்த வீடு..!
இங்கிலாந்தில் பேய்கள் தாங்கள் படுத்தால் அதே படுக்கையில் உடன் படுப்பதாக தம்பதி ஒன்று தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளில் பேய்கள் நடமாட்டம்
பெரும்பாலும் நாம் திரைப்படங்களில் தான் ஆவிகள் மற்றும் பேய்கள் வீடுகளில் நடமாடுவது மனிதர்களுடன் உடன் இருப்பது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இங்கிலாந்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கணவருடன் வசிக்கும் பெண் ஒருவர் தனது வீட்டில் இறந்து போன உறவினர்களின் ஆவிகள் நடமாடுவதாகவும் பகல் நேரத்தில் அவர்கள் சோஃபாவில் அமர்ந்து இருப்பதாகவும், இரவில் தங்களது படுக்கையில் படுத்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
அடிக்கடி சந்திக்கும் ஆவிகள்
தனது தாய் மேரி மற்றும் தனது பாட்டி கிளாரா ஆகியோரின் ஆவி அடிக்கடி லிவிங் ரூமில் சுற்றி திரிவதாக ஜேன் ட்ரு என்ற அந்த பெண்மணி கூறுகிறார்.
ஜேனின் தந்தை தங்களது வீட்டிற்குள் இருக்கக்கூடிய பாரின் பின்புறத்தில் அடிக்கடி நிற்பதை கண்டிருப்பதாக ஜேன் ட்ரூவின் கணவர் டேவிட் ட்ரூ கூறுகிறார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு பிளாக்பூலில் நடந்த கிளையர்வாயண்ட் நிகழ்ச்சியில் சந்தித்தார். இதன் பிறகு ஒரு வருடம் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த பெண்ணுக்கு வயது 59.
இவர்களின் ஆரம்ப கட்ட ரிலேஷன்ஷிப்பில் இருந்து ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான ஆவிகள் இந்த தம்பதிகளை அடிக்கடி சந்திக்க வந்ததாக சொல்லப்படுகிறது.
மக்கள் கோரிக்கை
2019 ஆம் ஆண்டு இறந்த ஜேனின் தாயார் ஒருமுறை ஜேனை பின்புறத்தில் இருந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஜேன் ட்ரூவின் கணவர் டேவிட் தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ளார். இவர் முழுக்க முழுக்க ஜேனை சார்ந்து வாழ்கிறார்.
இந்த சூழநிலையிலும் ஏராளமான மக்கள் இவரிடம் வந்து ஆவிகளை விரட்டி தருமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.