திருமணம் செய்து கொள்ள கோரி சிம்பு வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட பிரபல நடிகை..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.
இதையடுத்து அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தன.தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாராடி நீ மோகினி என்ற சீரியல் தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
அந்த பதில் ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள்.நானும சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம் என்று மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அதில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாமே என கேள்வி எழுப்புவது போல் ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர்.
அதற்கு ஸ்ரீநிதி திருமணம் செய்து கொண்டால் நல்லா தான் இருக்கும் ஆனால் தனக்கு தற்போது ஆள் இருக்கே என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த ஸ்டேட்டஸ் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்ரீநிதி - எனக்காக இத்தனை ஆண்டுகள் சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல.
இன்னைக்கு தான் புரிஞ்சது சிம்பு, எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்! லேட்டா தான் புரிஞ்சது ஆனா புரிஞ்சிடுச்சு. சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.
ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் போனில் 4 சதவீதம் தான் சார்ஜ் உள்ளது. ப்ளீஸ் வாங்க. பர்ஸ்ட்டு சிம்பு வேணும், நெக்ஸ்ட் தண்ணி வேணும்.
கோவமா இருக்காரு அவர மட்டும் புரிஞ்சிக்கனுமா? நம்மள புரிஞ்சிக்கமாட்டாரா? ப்ளீஸ் வாங்க. வந்து சேர்த்து வைங்க, கத்துரதுக்கு எனர்ஜி இல்ல.
எனக்கு அவ்ளோ ஒர்த்துனு இவ்ளோ வருஷமா எனக்கே தெரியல, புரிய வச்சிட்டாரு! வேணும், பாக்கனும், இப்பவே” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.