இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா இருவரும் இடம்பெற வேண்டும் - கவாஸ்கர் அட்வைஸ்
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை தொடங்க இருக்கிறது.
இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இரு அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா என இருவரும் விளையாட வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “கடந்த சில நாள்களாக சவுத்தாம்டனில் வெயில் விளாசிக்கொண்டு இருக்கிறது. அதனால் பிட்ச் நிச்சயமாக வேகமாக காய்ந்து வருகிறது. அதனால் சழற்பந்துவீச்சு நன்றாகவே எடுபடும். இதன் காரணமாக இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும்.
பந்து வீச்சு மட்டுமல்லாமல் அஸ்வினும், ஜடேஜாவும் அணியின் பேட்டிங் வரிசையையும் வலுவாக்குவார்கள். அவர்களை சேர்க்கும்பட்சத்தில் அணி முழுமையானதாக இருக்கும்.
பயிற்சி போட்டிகள் இல்லாத சூழலில், இந்திய வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடியது நல்ல விஷயம். இப்போதிருக்கும் இந்திய அணி அனுபவுமும், இளமையும் கொண்ட கலவையாக இருக்கிறது" என்றார்