என்ன கொன்னுருவேனு மிரட்டுராங்க - கவுதம் கம்பீர் கதறல்: ரசிகர்கள் அதிர்ச்சி!

Gautam Gambhir threaten to kill
By Anupriyamkumaresan Nov 24, 2021 06:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் கவுதம் கம்பீர்.

தற்போது பாஜக எம்.பியாக செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட், அரசியல் என அவ்வப்போது இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் சூழலில், தற்போது அவரின் உயருக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வசித்து வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இன்று காலை திடீரென டெல்லி காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தனக்கு இன்று மின்னஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. அதனை ஐ.எஸ்.ஐ. எஸ் தீவிரவாத அமைப்பு அனுப்பியுள்ளது என புகார் அளித்துள்ளார்.

என்ன கொன்னுருவேனு மிரட்டுராங்க - கவுதம் கம்பீர் கதறல்: ரசிகர்கள் அதிர்ச்சி! | Gautham Kambeer Threatened To Kill Fans Shock

இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், உடனடியாக கம்பீரின் இல்லத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து வல்லுநர்களை வரவழைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பீர் போட்ட 2 ட்வீட்களால் தான் தற்போது கொலை மிரட்டல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது மூத்த சகோதரர் போன்றவர் என கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்த கம்பீர், முதலில் உங்களின் வீட்டில் இருந்து யாரையேனும் எல்லைக்கு அனுப்பி பாருங்கள், அதன் பிறகு தீவிரவாத நாட்டின் தலைவரை சகோதரர் என்றுக் கூறுவீர்களா என்று நான் பார்க்கிறேன் என சாடியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது அவருக்கு வந்த கொலை மிரட்டலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.