பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய சவுரவ் கங்குலி - அடுத்த முக்கிய மூவ் இதுதான்!

Sourav Ganguly Cricket
By Sumathi Oct 16, 2022 07:34 AM GMT
Report

பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய பிறகு சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

சவுரவ் கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கடந்த 2018ம் ஆண்டிலிருந்து பிசிசிஐ தலைவராக இருந்துவந்தார். சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய சவுரவ் கங்குலி - அடுத்த முக்கிய மூவ் இதுதான்! | Ganguly Return To Association Of Bengal President

அதனைத் தொடர்ந்து கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடப் போவதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். வரும் அக்டோபர் 22 அன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் கங்குலி இரண்டாவது முறையாக தனது சொந்த ஊரின் சங்க தலைவராக பதவியேற்க உள்ளார்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர்

இதற்கிடையில், அக்டோபர் 18 ஆம் தேதி மும்பைக்கு சென்று பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ரோஜர் பின்னியிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைக்கிறார். இதுகுறித்து விளக்கமளித்த சௌரவ் கங்குலி, கிரிக்கெட் ஆடினாலோ அல்லது நிர்வாக பொறுப்பில் இருந்தாலோ,

எதுவாக இருந்தாலும் ஒரு நாள் அந்த பொறுப்பிலிருந்து விலகித்தான் ஆகவேண்டும் என்று கூறியுள்ளார். கங்குலி பிசிசிஐ தலைவராக ஆவதற்கு முன்பு 2015-2019 வரை பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.