நள்ளிரவில் தனியாக சென்ற பெண்ணை காரில் கடத்த முயன்ற கும்பல்... - அடுத்து நடந்த டுவிஸ்ட்...!
காரில் கடத்த முயன்ற கும்பல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நள்ளிரவில் தனியாக சென்ற ஒரு பெண்ணிடம் ஒரு நபர் அத்துமீறி காரில் கடத்த முயற்சி செய்தார். அப்போது, அந்த பெண் பயத்தில் கத்தி கூச்சலிட்டாள். காரிலிருந்து இறங்கிய நபர்கள் சரசரவென அப்பெண்ணிடம் ஓடி வந்தனர்.
இதனால், பயந்து போன அப்பெண் மீண்டும் கத்தி கூச்சலிட்டாள். ஆனால், பட்டென அனைவரும் அப்பெண் எதிரில் வந்து நின்று நடனமாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பிறகுதான் தெரிந்தது வந்த அனைவரும் நண்பர்கள் என்று.. அதிர்ச்சி அடைந்த அப்பெண் திகைத்து நின்று சிரித்தாள்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் என்னப்பா.. இது... இப்படியெல்லாம் செய்வீங்க... பாவம் அந்தப் பெண்... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
NEXT LEVEL... pic.twitter.com/9r1lrsjaRD
— LOCKERROOM (@LockerRoomLOL) November 20, 2022