காந்தி, நேரு புகழை கெடுக்க மத்திய அரசு சதி : கொந்தளித்த சோனியா காந்தி

Indian National Congress Sonia Gandhi India
By Irumporai Aug 15, 2022 07:31 AM GMT
Report

சுதந்திர போராட்டத்தின்போது, இந்திய படையின் தியாகங்களை சிறுமைப்படுத்தும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி

இந்தியாவின் 76- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி சோனியா காந்தி வெளியிட்ட அறிவிப்பில், அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் துறைகளில் கடந்த 75 ஆண்டுகளில் அதிக திறமை வாய்ந்த இந்தியர்கள் நாட்டை வளர்ச்சிக்கான பாதையில் அழைத்து சென்றுள்ளதாக கூறினார்.

மேலும், ஒரு வலிமையான ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்புகளுக்கான பிரிவுகளையும் உருவாக்கி தந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

காந்தி, நேரு புகழை கெடுக்க மத்திய அரசு சதி : கொந்தளித்த சோனியா காந்தி | Gandhi Nehrus Reputation Sonia Gandhi

 தியாகங்களை சிறுமைப்படுத்தும் மத்திய அரசு

அதே சமயம், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, ஆசாத் மற்றும் பட்டேல் போன்ற தலைவர்களின் புகழுக்கு அவதூறு ஏற்படும் வகையில், வரலாற்று உண்மைகளை பொய்யாக்க தற்போதைய அரசு முயற்சிப்பதாக கூறிய சோனிய காந்தி .

பொய்யாக்க நினைக்கும் அரசின் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்க்கும் என்று கூறினார். மேலும் சுதந்திர போராட்டத்தின்போது, இந்திய படையின் தியாகங்களை சிறுமைப்படுத்தும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.