சனாதன எதிர்ப்பு பேசினால்..நாக்கை பிடுங்கி - கண்ணை நோண்டுவோம்..மத்திய அமைச்சர்..!
சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் யாரும் நாட்டில் அரசியல் அதிகாரத்தையோ, அந்தஸ்தை தக்கவைத்து கொள்ள முடியாது என மத்திய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
சனாதன விவகாரம்
கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிர்பூ விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், டெங்கு மலேரியா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பது முக்கியம் என பேசினார். இந்த் கருத்துக்களை தமிழக அரசியலை தாண்டி தேசிய அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நாக்கை பிடுங்குவோம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது இது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து பல இந்துத்துவ கட்சிகளும், மத்திய அரசு அமைச்சர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது மத்திய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷிக்வாத் இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். சனாதனத்தை எதிர்த்து பேசுபவர்க்ளின் நாக்கை பிடுங்குவோம் என்றும் கண்ணை நோண்டுவோம் என்றும் அவர் கூறி இருக்கின்றார்.
சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்கள் எவரும் நாட்டில் அரசியல் அதிகாரம், அந்தஸ்தை தக்கவைத்து கொள்ள முடியாது என கூறி சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என கூறினார்.