ஜி20 மாநாடு: இந்தியா அல்ல 'பாரத்' - பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை!

Narendra Modi India World
By Jiyath Sep 09, 2023 06:15 AM GMT
Report

ஜி20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பு பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாடு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக தொடங்கி மாநாடு நடைபெற்று வருகிறது.

ஜி20 மாநாடு: இந்தியா அல்ல

மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். அழைக்கப்பட்ட அனைத்துத் தலைவர்களும் மாநாட்டுப் பகுதிக்கு வந்தடைந்தனர். கடைசியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரவேற்றுச் சென்றார்.

பாரத்

இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் அமர்ந்துள்ள பகுதிக்கு முன்பும் அந்நாட்டின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்துள்ள பகுதிக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதில் 'பாரத்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது.