ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு, நாளை மட்டும் தளர்வு - விரைவில் வெளியாகும் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் மே 24-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முழு ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது
இதனால் நாளை முழு ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்க வாய்ப்பள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தற்போது முடிவடைந்துள்ளதால் விரைவில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.