தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

Corona Lockdown Stalin
By mohanelango May 28, 2021 12:40 PM GMT
Report

தமிழகம் முழுவதும் தற்போது அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும் கோயம்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தளர்வுகற்ற முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள அதே கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை விற்பனையாளர்கள் மாநகராட்சி அனுமதி பெற்று வண்டிகளில் வீடுகளுக்கே எடுத்துச் சென்று விற்பனை செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.