சித்ராவின் மறைவுக்கு பின் 11 பெண்களுடன் உல்லாசம்..தொகுப்பாளினி கர்ப்பம் - ரேகா நாயர் பரபரப்பு தகவல்..!

V. J. Chitra
By Thahir May 24, 2022 12:27 AM GMT
Report

பிரபல சின்னத்திரை நடிகர் சித்ராவின் மறைவுக்கு பிறகு 11 பெண்களுடன் ஹேம்நாத் தொடர்பில் உல்லாசமாக இருப்பதாக ரேகாநாயர் தெரிவித்துள்ளார்.

சித்ரா தற்கொலை செய்து கொண்டு ஓராண்டு ஆன நிலையில் நாளுக்கு நாள் அவரின் மரணம் குறித்த சந்தேகங்களும் திடுக்கிடும் தகவலும் வெளியாகி சின்னத்திரையை அதிர்ச்சியூட்டி வருகிறது.

சித்ராவின் மறைவுக்கு பின் 11 பெண்களுடன் உல்லாசம்..தொகுப்பாளினி கர்ப்பம் - ரேகா நாயர் பரபரப்பு தகவல்..! | Frolic With 11 Women After Chitra S Death

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தற்கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சித்ராவின் பெற்றோர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலக வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது சித்ராவின் தாய் சத்யா என்ற பெயரை குறிப்பிட்டார். அதேசமயம் சித்ராவின் தோழியும், நடிகையுமான ரேகா நாயர் ஹேம்நாத் மீது பல புகார்களை தெரிவித்தார்.

அவர் ஹேம்நாத் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார்.பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் பழக்கம் ஹேம்நாத்துக்கு இருப்பதாக தெரிவித்தார்.

சித்ராவின் மறைவுக்கு பின் 11 பெண்களுடன் உல்லாசம்..தொகுப்பாளினி கர்ப்பம் - ரேகா நாயர் பரபரப்பு தகவல்..! | Frolic With 11 Women After Chitra S Death

மேலும் அவருடன் நெருங்கி பழகிய தொகுப்பாளினி ஒருவர்,அவரால் கர்ப்பமானதாகவும் ரேகா நாயர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அந்த தொகுப்பாளர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சிய நிலையிலும் ஹேம்நாத் மறுப்பு தெரிவித்ததாக கூறினார்.

இதனால் அந்த தெகுப்பாளினி வேறு வழியின்றி கருக்கலைப்பு செய்ததாகவும்,இதெல்லாம் சித்ராவுக்கும் தெரியும் என்றும் அவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

மேலும் சித்ராவின் மறைவுக்கு பின்னர் ஹேம்நாத் 11 பெண்களுடன் ஹேம்நாத் உல்லாசமாக இருந்து வருவதாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.