கிரிக்கெட் விளையாட பத்திரம். .மணமகளிடம் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்

Viral Photos Friend
By Irumporai Sep 10, 2022 09:53 AM GMT
Report

என்னதான் நட்பாக இருந்தாலும், ஏலே ஏலே தோஸ்து டா பாட்டு பாடினாலும், திருமணத்திற்கு பிறகு பெரும்பாலன நட்புகள் தொடர்வதில்லை , இந்த நிலையில் ,திருமணத்துக்கு பின்னும் மணமகனை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டுமென அவரது நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கிரிக்கெட் விளையாட பத்திரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் கிரிக்கெட் வீரரான இவர் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் என்ற அணியின் கேப்டனாகவும் இருந்து வரும் நிலையில் ஹரிபிரசாத்துக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கிரிக்கெட் விளையாட பத்திரம். .மணமகளிடம்  கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள் | Friends Of The Groom Signed With The Bride

இவர்களது திருமணம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை சந்தித்து திருமணத்திற்கு பின்னரும் ஹரிபிரசாத்தை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

கிரிக்கெட் விளையாட பத்திரம். .மணமகளிடம்  கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள் | Friends Of The Groom Signed With The Bride

வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவித்ததாகவும் அதற்கான ஒப்பந்த பத்திரத்தை மணமகள் பூஜாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றனர்.

வைரலாகும் பதிவு

இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்த உறவினர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு பின்னர் மணமகன் விளையாட்டுகளில் கலந்து கொள்ள மனைவிமார்கள் ஒரு சில சமயம் தடுக்கும் சூழலில் மணமகனின் நண்பர்களின் இந்த சம்மத ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எது எப்படியோ இந்த பத்திரத்தால் இந்த நட்பு வட்டாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.