பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகிறார்

Narendra Modi Emmanuel Macron
By Yashini Feb 15, 2026 08:57 AM GMT
Report

இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை இந்தியா வருகிறார்.

அவர் இந்தியாவில் நடைபெறும் AI Impact Summit என்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது, நரேந்திர மோடி அவர்களுடன் சந்தித்து, முக்கிய துறைகளில் இந்தியா- பிரான்ஸ் உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகிறார் | French President Emmanuel Macron Came India

பிப்ரவரி 17ஆம் தேதி மும்பையில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

அங்கு பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியா–பிரான்ஸ் “Year of Innovation” திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அதன் பிறகு மும்பையில் இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிப்ரவரி 19ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.