Wow...கால்பந்து போட்டியில் உயரிய விருதை வென்றார் பிரான்ஸ் வீரர் கரிம் பென்சிமா..! - குவியும் வாழ்த்துக்கள்
கால்பந்து போட்டியில் உயரிய விருதை பிரான்ஸ் வீரர் கரிம் பென்சிமா வென்றிருக்கிறார்.
‘பாலன் டி ஓர்‘ விருது
ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கி வரும் வீரர்களுக்கு ‘பாலன் டி ஓர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு சிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி வென்றார். இந்த ஆண்டுக்கான ‘பாலன் டி ஓர் விருது’ பட்டியலில் ஆடவர் பிரிவில் மொத்தம் 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ‘பாலன் டி ஓர் விருதை’ பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா வென்றிருக்கிறார்.
இவர் அந்த அணிக்காக விளையாடிய 46 ஆட்டங்களில் 44 கோல்களை பதிவு செய்துள்ளார்.
தற்போது, பிரான்ஸ் வீரர் கரிம் பென்சிமாவிற்கு சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Ranked at the 3rd place for the 2022 Ballon d’Or@KevinDeBruyne@ManCity#ballondor pic.twitter.com/ypYnfcA0mU
— Ballon d'Or #ballondor (@francefootball) October 17, 2022