உயரிய விருது வழங்கி பிரதமர் மோடியை கௌரவித்த பிரான்ஸ் நாடு..!
பிரான்ஸ் நாடு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது அந்நாட்டு அரசு.
சிவப்பு கம்பள வரவேற்பு
பிரான்சின் பேஸ்டிலா தினம் எனப்படும் அந்நாட்டு தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து பாரிஸ் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் பார்னே வரவேற்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு திரண்டு இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு அளித்தனர்.
உயரிய விருது வழங்கிய பிரான்ஸ்
தொடர்ந்து எலிசி அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிகர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின் அரண்மனையில் பிரதமர் மோடிக்கு இரவு விருது அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதினை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நரேந்திர மோடி.
Sharing highlights from the first day of the Paris visit. pic.twitter.com/OpGVkpqu9I
— Narendra Modi (@narendramodi) July 14, 2023