பாக்ஸ்கான் ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க தலைமை முடிவு - காரணம் என்ன ?

foxconn
By Irumporai Dec 29, 2021 06:02 AM GMT
Report

கடந்த 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் பாக்ஸ்கான் நிறுவனமும் தமிழக அரசும் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது . ஆனால் பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் ஸ்ரீபெரம்பதூரில் உள்ள செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ’பாக்ஸ்கான்’ ஆலை நிர்வாகத்தை மாற்றியமைக்க தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

சமீபத்தில் அடிப்படை வசதிகள் இல்லையென கூறி பெரிய அளவில் ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்த முடிவினை பாக்ஸான் நிறுவனம் எடுத்துள்ளது.