இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி : இலங்கையில் இருந்து 4 பேர் அகதிகளாக வருகை

srilanka dhanushkodi SriLankaEconomicCrisis
By Irumporai Apr 08, 2022 03:20 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது கடும் விலை உயர்வு காரணமாக நடுத்தர மக்கள் வாழ்வு கேள்வி குறியாகியுள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, ராஜபக்சே அரசை பதவி விலகக் கோரி பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,இலங்கையில் இருந்து நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

இதனையடுத்து,அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இலங்கையிலிருந்து இரண்டு குடும்பத்தை சேர்ந்த 16 பேர் வந்த நிலையில்,தற்போது மேலும் நான்கு பேர் தமிழகம் வந்துள்ளதால் அகதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளித்து நிலைமையை முன்பு இருந்தது போல் மீட்டெடுக்க பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை கமிட்டியை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.