இலங்கையில் 4 புதிய மந்திரிகளை நியமித்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச!

Ranil Wickremesinghe Sri Lanka
By Swetha Subash May 14, 2022 10:50 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.

ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்துவந்த இந்த போராட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு வன்முறை மூண்டதால் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 9 பேர் உயிரிழந்தனர். 

இலங்கையில் 4 புதிய மந்திரிகளை நியமித்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச! | Four New Minister Sworn In In Srilanka

இந்த கலவரத்தை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். மகிந்த ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்தார்.

பேச்சுவார்த்தை முடிவில் 73 வயதான முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் பதவியை ஒப்படைத்தார். அவரும் நாட்டின் 26-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கையில் 4 புதிய மந்திரிகளை நியமித்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ச! | Four New Minister Sworn In In Srilanka

அவர் தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார். இந்நிலையில், இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சர்கள் 4 பேர் இன்று பதவியேற்றனர். ஜி.எல்.பெரீஸ், தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, காஞ்சனா விஜயசேகர ஆகியோருக்கு அதிபர் ரனில் விக்ரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.