“ஜாக்கிரதையா இருந்துக்க” - இந்திய வீரர்களை எச்சரித்த முன்னாள் வீரர்
இந்திய அணிக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி குறிவைக்கும் நான்கு முக்கிய வீரர்கள் குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெரிமி ஸ்னேப் கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று நாட்டிங்காமில் தொடங்குகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனிடையே இங்கிலாந்து அணி அதிக கவனம் செலுத்த வாய்ப்புள்ள நான்கு வீரர்கள் யார் என்பதை முன்னாள் வீரர் ஜெரிமி ஸ்னேப் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தான் இங்கிலாந்து அணியின் முதல் குறியாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இவர்கள் 4 பேர் தான் மிகவும் ஆபத்தானவர்கள் எனவும், இந்திய பயணம் இங்கிலாந்து அணிக்கு மிக மோசமாக அமைந்ததால், தற்போது பழி தீர்க்க இங்கிலாந்து அணி நிச்சயம் போராடும் எனவும் ஜெரிமி ஸ்னேப் தெரிவித்துள்ளார்.