ஜோதிமணி உட்பட 4 காங்கிரஸ் எம்.பிக்கள் திடீர் இடைநீக்கம்!
மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேரை சஸ்பெண்டு செய்து செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
இடைக்கால நீக்கம்
நாடாளுமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 பேரை இடைக்கால நீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடமால் அமளியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மக்களவை சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.
4 எம்.பிக்கள்
மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் 4 எம்.பிக்களும் பங்கேற்க கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவைக்குள் எந்த பதாகை போராட்டத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். நீங்கள் பதாகைகளை காட்ட விரும்பினால், அதை வீட்டிற்கு வெளியே செய்யுங்கள் என்று எச்சரித்தார்.