'' கோவை மாவட்டத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது'' : முன்னாள் அமைச்சர் வேலுமணி தர்ணா

AIADMK SPVELUMANI dharnaCOIMBATORE
By Irumporai Feb 18, 2022 06:17 AM GMT
Report

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவையில் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு மனு அளிக்க வந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலினை  நேர்மையாகவும் ,ஜனநாயக முறைப்படியும் ,பாதுகாப்புடன் நடத்த வலியுறுத்தி, எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து வந்த திமுகவினரை கோவை மாவட்டத்திலிருந்து வெளியேற்றக் கோரி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்

கோவை மாவட்டத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது; ரவுடிகளை வெளியேற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும். நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என செய்தியாளர்களிடம் எஸ்பி வேலுமணி கூறினார்.