இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு - யார் இந்த நெல்லை முத்து?
முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து காலமானார்.
நெல்லை முத்து மறைவு
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சு. முத்து. ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றினார். அறிவியல் மற்றும் விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ISRO-வின் ஆரம்பகால ராக்கெட் திட்டங்களில் முக்கிய பங்காற்றினார். செயற்கைக்கோள் ஏவுதல் மற்றும் உந்துவிசை அமைப்புகளில் தொழில்நுட்ப ஆய்வுகளில் ஈடுபட்டார்.
யார் இவர்?
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றியவர். இவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது 4 புத்தகங்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்துவரும் நெல்லை சு.முத்து உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலமானார்.
அவரது உடல் மாலை 6 மணி அளவில் மதுரையில் உள்ள அவரது மகள் கலைவாணி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெருமென தகவல் வெளியாகியுள்ளது.