செக் மோசடி வழக்கு - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதிரடி கைது!
காசோலை முறைகேடு வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணிக்காக 1990-களில் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் பிரசாந்த் வைத்யா. இவர் தற்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் பிரசாந்த் வைத்யா உள்ளூர் வியாபாரி ஒருவரிடமிருந்து ஸ்டீல் வாங்கியுள்ளார். அதற்காக அவர் கொடுத்த காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் பவுன்ஸ் ஆனது.
கைது
இதனால் புதிதாக பணம் அனுப்பும்படி அந்த வியாபாரி வலியுறுத்தியபோது, அதற்கு வைத்யா மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த வியாபாரி நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் பிணை தொகை அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
