பராகுவே துப்பாக்கி சூடில் பிரபல கால்பந்து வீரரின் மனைவி உயிரிழப்பு
பராகுவேயில் நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் கால்பந்து வீரர் இவான் டாரஸின் மனைவி கிறிஸ்டினா விட்டா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பல ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த இசை நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார்.
சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து அந்த நபர் தப்பியோடினார். இந்த தாக்குதலில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் பராகுவே கால்பந்து வீரர் இவான் டாரஸின் மனைவி கிறிஸ்டினா விட்டா அரண்தாவும் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சிறந்த கால்பந்து வீரர் இவான் டாரஸூம் அவரது மனைவி கிறிஸ்டினாவும் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதாக தெரிகிறது.
மூன்று குழந்தைகளுக்கு தாயான கிறிஸ்டினா உடற் பயிற்சியாளரும், மாடல் அழகியும் ஆவார்.
கிறிஸ்டினா இசைக் கச்சேரி அரங்கின் விஐபி பகுதியில் இருந்தபோது, துப்பாக்கிச் சூடு தாக்குதலால் தலையில் பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்டு கணவர் இவான் மற்றும் உதவியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கிறிஸ்டினா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.