கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம் - லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி...!

Football Death
By Nandhini Jan 03, 2023 06:20 AM GMT
Report

கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பீலேவின் உடலுக்கு ரசிகர்களும், உலக மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கால்பாந்து ஜாம்பவான் பீலே

சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் கால்பாந்து போட்டிகளில் ஹீரோவாக வலம் வந்தவர் பீலே. இவரின் முழு பெயர் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ. இவர் சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் அடித்து மகுடம் சூடியவர். அதிக கோல்கள் அடித்த தரவரிசையில் இவர் 10-வது இடத்தில் உள்ளார்.

பீலே 1958, 1962 மற்றும் 1970ம் ஆண்டுகளில் பிரேசிலை உலகக் கோப்பை வெற்றிகளுக்கு அழைத்துச் சென்றார், மேலும் அவர் 77 கோல்களுடன் அணியின் அனைத்து நேரத்திலும் சிறந்த கோல் அடித்தவர். இந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பையின் போது, ​​பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீலேவின் கடைசி உருக்கமான பதிவு

கடந்த ஆண்டு பிலேவிற்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அக்கட்டி அகற்றப்பட்டது. சமீபத்தில், பீலே மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் பீலே உடல் பலவீனமாக உள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, நான் தைரியமாக இருக்கிறேன், நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறேன். வழக்கம் போல் எனது சிகிச்சையைப் பின்பற்றுகிறேன். நான் பெற்ற அனைத்து கவனிப்புக்கு மருத்துவ மற்றும் நர்சிங் குழுவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று பீலே தனது சமூகவலைத்தள பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார்.

football-legend-peles-death-peoples-tribute

பீலேவின் உடல் இன்று நல்லடக்கம்

இந்நிலையில், கடந்த 30ம் தேதி பிரேசில் கால்பந்து நட்சத்திரம் பீலே தனது 82 வயதில் உயிரிழந்தார். இதனையடுத்து, பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மருத்துவமனையில் உள்ள பீலேவின் உடல் இன்று காலை அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி முதல் தற்போது வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் பின்னர், பீலேவின் உடல் அடங்கிய சவப்பெட்டி இன்று அங்குள்ள தெருக்களின் வழியாக எடுத்து செல்லப்பட உள்ளது. அவரது தாயார் 100 வயதான செலிஸ்டி அரன்டெஸ் வசிக்கும் இல்லத்தையும் கடந்து செல்ல உள்ளது. படுத்த படுக்கையாக உள்ள தாயார், மகன் இறந்த தகவலைக்கூட புரிந்து கொள்ளும் மனநிலையில் செலிஸ்டி இல்லை.

இறுதியில் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படுகிறது.

ஏறக்குறைய 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டகங்கள் இங்கு இருக்கின்றன. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். இங்கு நடக்கும் இறுதி சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. கால்பந்து நாயகன் பீலேவின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.