வெச்சு விளாசிய ரொனால்டோ ரசிகர்கள்... - தன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார் சான்டோஸ்...!
நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டி போர்ச்சுக்கல் அணி படுதோல்வியால் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பெர்னாண்டோ சான்டோஸ் விலகியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வந்தது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணி நுழைந்துள்ளது.
பெர்னாண்டோ சான்டோஸ் விலகல்
இந்நிலையில், போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பெர்னாண்டோ சான்டோஸ் விலகியுள்ளார்.
சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதி ஆட்டத்தில், மொரோக்கோ அணியுடன் மோதிய போர்ச்சுக்கல் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரியாவிற்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரொனால்டோவை வெளியே அமரவைத்து போர்ச்சுகல் அணியை ஆட வைத்தார் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ்.
இதனையடுத்து, மொராக்கோ அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்ட ரொனால்டோ ஆட்டத்தின் 45வது நிமிடத்தில்தான் களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டார்.
இதனால்தான் போர்ச்சுக்கல் அணி தோல்வி அடைந்தது என்று ரசிகர்கள் பயங்கரகமாக பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸை குற்றம் சாட்டினர். மேலும், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக சான்டோஸை திட்டித்தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், போர்ச்சுக்கல் அணி தோல்வியால் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சான்டோஸ் தற்போது விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.