நடிகை மஞ்சு வாரியரை திருச்சியில் மடக்கிய பறக்கும் படை - ரசிகர்கள் செய்த காரியம்!

Tamil nadu Manju Warrier Tamil Actress trichy Lok Sabha Election 2024
By Jiyath Apr 07, 2024 07:49 AM GMT
Report

பிரபல நடிகை மஞ்சு வாரியார் வந்த காரை மடக்கி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

பறக்கும் படை

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

நடிகை மஞ்சு வாரியரை திருச்சியில் மடக்கிய பறக்கும் படை - ரசிகர்கள் செய்த காரியம்! | Flying Soldiers Check Actress Manju Warriers Car

இதனால் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை சோதனைகளை நடத்தி வருகின்றன.

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

மஞ்சு வாரியார்      

இந்நிலையில் இன்று திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மலையாள நடிகை மஞ்சு வாரியரின் காரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

நடிகை மஞ்சு வாரியரை திருச்சியில் மடக்கிய பறக்கும் படை - ரசிகர்கள் செய்த காரியம்! | Flying Soldiers Check Actress Manju Warriers Car

பின்னர் காருக்குள் எதுவும் இல்லை என்பது தெரிந்தவுடன் அவரை அதிகாரிகள் செல்ல அனுமதித்தனர். ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.