ஆத்தாடி எவ்வளவு பெருசு..நகர்மன்ற தலைவருக்கு 20 அடியில் மாலை - அசந்து போன மக்கள்
கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்து வந்து 20 அடி உயர மாலையை ராணிப்பேட்டை நகரமன்ற தலைவருக்கு அணிவித்து வாழ்த்து இளைஞர்கள் சிலர் வாழ்த்து தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை நகராட்சியின் நகர மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஜாதாவிற்கு அவர் போட்டியிட்ட வார்டினை சேர்ந்த இளைஞர்கள் கிரேன் மூலம் சுமார் 20 அடி உயர மாலையை ஊர்வலமாக எடுத்து வந்து அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை 15வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுஜாதா. இன்று நடைபெற்ற ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த 15வது வார்டு இளைஞர்கள், ராட்சத கிரேன் மூலம் 20 அடி உயர மாலையை,
ஊர்வலமாக இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நகர்மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சீம, ரமேஷ் கர்ணா மற்றம் 30 வார்டு கவுன்சிலர் ஒரே மாலையாக அனைவருக்கும் கிரேன் மூலம் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.