இந்தியாவிலேயே இதுதான் டாப்; ஏற்காட்டில் மிதக்கும் உணவகம் - அசத்தல் அறிவிப்பு!
ஏற்காடு, உதகை, கோவையில் மிதக்கும் உணவகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
மிதக்கும் உணவகம்
விருதுநகரில் செயல்பாடின்றி உள்ள தமிழ்நாடு ஹோட்டலை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேரில் பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியாவிலேயே தமிழகம் சுற்றுலாத்துறையில் முதலிடத்தில் உள்ளது.
அதற்கு காரணம் தமிழகத்தில் புராதன கோயில்கள் உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு 100 கோடி ஒதுக்கியுள்ளது,செயல்பாடின்றி உள்ள 13 தமிழ்நாடு உணவகங்களை மறுசீரமைக்க ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அசத்தல் அறிவிப்பு
சென்னை அருகே முட்டுக்காட்டில் அமைக்கப்படும் மிதக்கும் உணவகம் போன்று, ஏற்காடு, உதகை, கோவையிலும் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவர புதிய படகு குழாம்களை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலா துறையின் கீழ், செயல்பாடின்றி உள்ள 300 இடங்களை புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.