மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபரீதம் - 5 மீனவர்கள் என்ன ஆனார்கள்?

chennai fisherman injured boat accident
By Anupriyamkumaresan Jun 11, 2021 04:36 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகு எதிர்பாராத விதமாக கோவளம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

சென்னை காசிமேடு மீன்பிடிதுறைமுகத்திலிருந்து நேற்று காலை சார்லஸ், காந்தி, ஜானி, வேல்முருகன்ம் பொன்னுசாமி உள்ளிட்ட 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவளம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிந்தபோது திடீரென எழுந்த கடல் அலையால், படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபரீதம் - 5 மீனவர்கள் என்ன ஆனார்கள்? | Fisherman Boat Accident Fisherman Injured

இதில் பயணம் செய்த மின்வர்கள் படகு மற்றும் கேனை பிடித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்த மற்ற மீனவர்கள், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபரீதம் - 5 மீனவர்கள் என்ன ஆனார்கள்? | Fisherman Boat Accident Fisherman Injured

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த மீனவர்கள் மேல் சிகிச்சைக்காக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.