மீனவர் வலையில் சிக்கிய உடும்பு சுறா - ரூ.1 லட்சத்திற்கு விற்பனை..!
கன்னியாகுமரி அருகே மீனவர் வலையில் சிக்கிய 2-டன் எடை உள்ள 10- அடி நீளம் கொண்ட அரிய வகை "உடும்பு சுறா" சிக்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் மெல்பின். இவர் தனது பைபர் படகில் சக மீனவர்களுடன் இன்று காலை குளச்சல் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் வந்த ராட்சத சுறா மீன் அவர்களின் பைபர் படகை மோதி தாக்கியது.
இதனால் மீனவர்கள் நிலை தடுமாறிய நிலையில் அந்த சுறா மீன் தொழிலுக்காக மீனவர்கள் விரித்திருந்த வலைக்குள் தானாகவே சிக்கி கொண்டது.
ராட்ச சுறா மீனை மீனவர்கள் பைப்பர் படகில் ஏற்றி கிரேன் உதவியுடன் கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர். குளச்சல் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட சுறா மீன் 10-அடி நீளமும் 2-டன் எடையும் கொண்ட அரிய வகை "உடும்பு சுறா" என்பது தெரியவந்தது.
இந்த சுறா மீனை குளச்சல் துறைமுகத்தில் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர்.பைபர் படகில் சிக்கிய உடும்பு சுறா சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு விலை போனதாக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
