2 பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவன் - கொந்தளித்த மனைவி!

Tamil nadu Marriage Crime
By Sumathi Dec 13, 2022 07:09 AM GMT
Report

இரு பெண்களை திருமணம் செய்து கொண்ட கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.

3 திருமணம் 

நெல்லை, பொன்னாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஏஞ்சல் மரிய பாக்கியம், இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 'ஏஞ்சல் மரிய பாக்கியத்திற்கும், குரும்பூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 2009 ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

2 பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவன் - கொந்தளித்த மனைவி! | First Wife Compliant Husband Married 2 More Nellai

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும், கணவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளதால் மனைவியை அடித்து துன்புறுத்தி வரதட்சணை கேட்டுள்ளார். இதனால் மனைவி தனது தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார். இதுகுறித்து புகார் அளித்ததன் பேரில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மனைவி புகார்

அதில் மாத செலவுத் தொகையாக ரூ. 9000, ஒவ்வொரு மாதமும் மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் தரும்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கிடையில், நாசரேத் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அன்புச் செல்வி என்பவரை முத்துக்குமார் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

2 பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவன் - கொந்தளித்த மனைவி! | First Wife Compliant Husband Married 2 More Nellai

மேலும், தூத்துக்குடி டெல்சி ராணி என்பவரையும் திருமணம் செய்தது தெரியவந்தது. இருவரையும், தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது என்பதை மறைத்து திருமணம் செய்துள்ளார். இதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.